சனி, 12 நவம்பர், 2016

பிஸ்னஸ் ஸ்கூல் வாட்ஸ்ஆப் குரூப்

இந்த வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்த தன் நோக்கமானது அனைவரும் ஒருவருக்கொருவர் தங்கள் தொழிலை வளமைப்படுத்துவதற்க்காகவும், வேலைவாய்ப்பைபெறவும் அதேபோன்று தீர விசாரித்தும் முடிவுகள் எடுக்கவும்,தாங்கள் எடுக்கும் முடிவுக்கு இந்த குரூப்பும் அதன் அட்மின் பொறுப்பு ஏற்க்காது.
கருத்து சுதந்திரம் உண்டு அது பிறரை காயப்படுத்தாவண்ணமாக இருத்தல் அவசியம்.
மூடநம்பிக்கை குறித்த சாயீபாபா மற்றும் சில ஆடியோக்கள்
உண்மையில்லாத தகவல்களையும்,
இந்த செய்தியை பகிர்ந்தால் இலவசப் பொருட்கள் கிடைக்கும் இது போன்ற தகவலுக்கு இடம் அளிக்கப்படாது.
எந்தவித முன் அற்ிவ்ிப்்ப்ு மற்றும் எச்சரிக்கை இன்றி நீக்கப்படுவீர்கள்
இந்த லிங்க் பயன் படுத்தி இணைந்த கொள்ளவும்

https://chat.whatsapp.com/74znAA5fSk2JDlMxLEYUQr

ஞாயிறு, 6 நவம்பர், 2016

Joke

ஆண்களின் மனசு தர்மஆஸ்பத்திரி மாதிரி உள்ளே என்ன நடக்குதுனு ஊருக்கே தெரியும்..........!!!

ஆனால் பெண்களின் மனசு அப்போலோ ஆஸ்பத்திரி மாதிரி என்ன நடக்குது?எப்படி இருக்குது யாருக்குமே தெரியாது.............!!!!!

இது கதையல்ல , நிஜம்..

😎😂😳😜👍🏽
PART TIME JOB
Sundarapandiyan p
Madurai
Call me
+91 9994968884

Kutti kathai

ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சுசாப்பிட்டாங்களாம். ஊரில் அரசால் புரசலாக பணக்காரர் பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ளஆரம்பித்தார்களாம். இதை மறைக்க ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம். “இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும் இவரா கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது” என்று பேசிக்கொண்டார்களாம். இதுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை....😂😂

PART TIME JOB
Sundarapandiyan p
Madurai
Call me
+91 9994968884

Just think

👳🏻👸🏻 பெற்றோருக்கு பயந்து காதலை விட்ட காலம்போய்! 💖

இப்போ பெட்ரோலுக்கு-🏍 பயந்து காதலை விடுறாங்க😂 *இளைஞர்கள்*

🙏�🙏�🙏�🙏�🙏�

💁🏻 'அறிவு இருக்கா?' என்று ஒருவரை திட்டும்முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்!
'எங்கிட்ட இல்ல,உங்கிட்ட இருந்தா கொடு'ன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க!?😊😊🙏🙏🙏🙏

💃�💃�💃�💃�

‬: ஒரு பொண்ணுகிட்ட ஃபோன் நம்பர் வாங்கிற மாதிரி நடக்கிறது பெரிதில்லை!!
அந்த பொண்ணு அந்த நம்பர மாத்தாம இருக்கிற மாதிரி நடந்துக்கணும்!!!

👀👀👀👀👀👀

👫 திருமணம் ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு
பெண்ணின் வாழ்வில் ஒருமாற்றம்
ஒருமரத்தை வேறோடுபிடிங்கி வேறுஇடத்தில் நடும் விழா💑💑👍🐅

🏃🌸🌸🌸

ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்👩
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது👦
திருமணம் 💑

💚💃�💚💃�💚💃�

🙋🏼 விரிசல் வராமல் உறவு
இல்லை..
வந்தால் விலகுவது உறவே
இல்லை..

😉🖐🖐🖐

👸🏻 #மனைவி கணவனைத் திட்டுவது
#குளத்தில் கல் எறிவது போல..!
#கணவன் மனைவியைத் திட்டுவது
#தேன் கூட்டில் கல் எறிவது போல!😜
😂😂

🐤🐤🐤🐤🐤

👫 வாழ்க்கைல அறிவுரை🤔 சொல்ல #அறிவாளியா இருக்கனும்னு அவசியமில்ல,
வாழ்க்கைல😡😴😡 #அடிபட்டவனா இருந்தாலே🤗 போதும்..!

😂💚😂😂

💪� #வெற்றியை அடைவதற்கு #ஏழு_கடலை தாண்டிலாம் போக வேணாம்,
தினமும் #காலையில எழுந்து #வேலைய கவனிச்சாலே போதும்

❤�❤❤❤

#எல்லோருக்குமே அவர்கள் பக்கம் #பேச சில #நியாயங்கள் இருக்கிறது சிலருக்கு #பசி சிலருக்கு #வலி சிலருக்கு #விசுவாசம்.
💘💘💘😰😰💘💘💘

😫கதறி
அழுவதை விட
கொடுமையானது.,
#பிறர்
முன்னால்
#சிரிப்பது போல்
#நடிப்பது...

💃�💃�💃�💃�💃�💃�

👉 நாம் #பிறர்க்கு செய்வது
#மற்றொருவர் மூலமாக
#நமக்கே வந்து சேரும்!
அது #உதவியாக இருந்தாலும்
சரி, #துரோகமாக இருந்தாலும்
சரி!

⌚⌚⌚⌚⌚⌚

😒 #தூக்க_மாத்திரை கண்டுபிடிப்பதற்கு முன்னால் நம் #முன்னோர்கள் ஒரு மருந்தை கண்டுபிடித்து வைத்திருந்தார்கள் #அயராத_உழைப்பு..
💪💪💪

🌷🌷🌷🌷🌷🌷🌷

#5மிஸ்ட்காலை பார்த்த #மனைவி"என்ன #ஆச்சோ?
என #கலங்குவதும்,அதுவே மனைவியின் 5 மிஸ்ட்காலை பார்த்து என்ன ஆக #போகுதோ ?
என #கணவன் கலவரப்படுவது #சகஜம்தான் 😉😜😜

💋💋💋💋💋💋

#இறுதிவரை வாழ்க்கை இப்படியே #இருக்க வேண்டும் என்ற கவலை சிலருக்கு..!!
#இப்படியே இருந்து விடுமோ என்ற #கவலை பலருக்கு..!!
#என்னா_வாழ்க்கை_டா😕😕

👉🌷👉👉🌷🌷👉

#உங்களுக்கு மிகவும்
#பிடித்தவர்கள் உங்களை விட்டு #விலகாமல் இருக்க வேண்டுமென்றால் மிகவும் #நெருங்கி பழகாதீர்கள்...
🙏�

💋விஜய்💋

PART TIME JOB
SUNDARAPANDIYAN P
MADURAI
Call me
+91 9994968884

புதன், 2 நவம்பர், 2016

பாரம்பரிய உணவு முறை மறக்க வேண்டாம்

அனில் அம்பானி, கரீனா கபூர் உட்பட பல்வேறு பிரபலங்களுக்குப் பிரத்யேக ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் ருஜுதா திவேகர். இந்தியாவின் மிகவும் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா உணவுமுறைகள் குறித்துப் பல புத்தங்களை எழுதியிருக்கிறார். இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் உணவியல் தொடர்பான புத்தகங்களில் ருஜிதாவின் புத்தகங்கள் முக்கியமானவை. சமீபத்தில் இவர் எழுதியுள்ள ‘இந்தியன் சூப்பர் ஃபுட்ஸ்’ (Indian super foods) புத்தகத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரங்கில் வாசகர்களோடு கலந்துரையாடினார்.  ஆரோக்கியமாக வாழ்வதற்காக அவர் சொன்ன ஏழு விதிகள் இங்கே.
1. உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அரிசியைக் குறையுங்கள் என யாராவது சொன்னால் தயவுசெய்து காது கொடுத்துக் கேட்காதீர்கள். அரிசி, நமது பாரம்பரிய உணவு. அரிசிதான் இங்கே அதிகம் பயிரிடப்படுகிறது, “அந்தந்த மண்ணில் விளையும் உணவுதான் அந்த மக்களுக்கு” என்பதே ஹெல்த்தி சீக்ரெட். எனவே, அரிசியைத் தவிர்க்காதீர்கள். அரிசி எந்த விதத்திலும் கெடுதி விளைவிக்காது. மாவுச்சத்து உள்ளது போலவே அமினோஅமிலங்களும் இதில் நிரம்பியுள்ளன. அரிசி உணவுகள்தான் செரிமானத்துக்கு ஏற்றவை. எனவே, இட்லியோ சாதமோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
2. நெய் நன்றாக ஊற்றிச் சாப்பிடுங்கள். நெய்யின் கிளைசெமிக் எண் குறைவானது. இதனால், சர்க்கரை நோயாளிகள்கூட பயப்படாமல் நெய் ஊற்றிச் சாப்பிடலாம். நெய்யில் அதிகமான நல்ல கொழுப்பு உள்ளது. இது, இதயத்துக்கு நல்லது. எனவே, சாம்பார் சாதத்தில் நெய் ஊற்றிச் சாப்பிட நடுங்காதீர்கள்.
3. தேங்காயில் கொலஸ்ட்ரால் இருக்கிறது, முந்திரி சாப்பிட்டால் வெயிட் போடும் என்பதை நம்பி பலர் இதனைத் தவிர்த்துவிடுகின்றனர் இது தவறு. தேங்காயும், முந்திரியும் நம் ஊரில் அதிகம் விளைபவை. தேங்காய், முந்திரி இரண்டிலும் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது; கொலஸ்ட்ரால் இல்லை. நமது உடல் இயங்குவதற்கு கொலஸ்ட்ரால் அத்தியாவசியம். நமது கல்லீரல் தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்துகொள்கிறது. தாவர உணவுகளில் கொலஸ்ட்ரால் உள்ளது என்பது தவறான செய்தி. பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடுவதைவிட நம்மூர் நிலக்கடலை, முந்திரியைச் சாப்பிடுங்கள்.
4. கரும்பு நமது ஊரில் அதிகம் விளையக்கூடியது. கரும்பைக் கடித்துச் சாப்பிட்டால், பல்லுக்கும் நல்லது. உடலுக்கும் நல்லது. நாட்டுவெல்லத்தைப் பனிக்காலம் மற்றும் மழைக் காலத்திலும் சாப்பிடுங்கள். சர்க்கரையைக் கோடை காலத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலர், சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு பிரவுன் சாக்லேட், செயற்கை இனிப்புகள் போன்றவற்றைச் சாப்பிடுகிறார்கள். இது தவறு. கரும்பில் இருந்து இயற்கையானமுறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையைச் சாப்பிடத் தயங்காதீர்கள். அளவான சர்க்கரையோடு காபியும், டீயும் தாராளமாக அருந்துங்கள்.
5. தைராய்டு பிரச்னை பலரை வாட்டி வதைக்கிறது. சிலர் எடையைக் குறைத்தால் தைராய்டு குறையும் என்பார்கள். ஆனால், எடையும் குறைக்க முடியாமல், தைராய்டையும் குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள். இதற்கு எளிய தீர்வு உண்டு. முதலில், நீங்கள் மின்னணு கேட்ஜெட்டுகள் பயன்படுத்துவதைக் குறையுங்கள். குறைந்தபட்சம் இரவு படுக்கைக்குச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாவது டி.வி, செல்போன், லேப்டாப் எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள். நன்றாக உறங்குங்கள். மனஅழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள். வாரம் 150 நிமிடங்கள் பிடித்த உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். இரவு உணவைப் படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரம் முன்பே முடித்துவிடுங்கள். இதைச் செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் இருக்கும்.
6. சிறுதானியங்களில் பல நுண்ணூட்டச் சத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அதற்காக எப்போதும் சிறுதானியம் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறுதானியத்தில்தான் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. எனவே, சிறுதானியமும் ஒரு நல்ல உணவு. அவ்வப்போது அதனை எடுத்துக்கொள்ளலாம் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.
7. பலர் என்னிடம் கேட்கும் கேள்வி, எப்படிச் சாப்பிடும் உணவு அளவைக் குறைப்பது என்பதுதான். நமது நாக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. குழந்தை, தேவைக்கு மீறி தாயிடம் இருந்து தாய்ப்பாலை எப்போதும் குடிக்காது. நமது வயிறு நிறைந்த பின் யாரவது சாதத்தை நம் வாய்க்குள் வைத்துத் திணித்தாலும் நம்மால் விழுங்க முடியாது; துப்பத்தான் முடியும். ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறோம் ஒரு ஜாங்கிரி சுவையாக இருக்கிறது என்றால் நம்மால் அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டுதான் சாப்பிட முடியும். மூன்றாவது ஜாங்கிரியைச் சாப்பிடும்போது முதல் ஜாங்கிரியைச் சாப்பிட்ட அதே சுவை இருக்காது. ஆசையின் காரணமாகச் சாப்பிடுவது வேறு, சுவைக்காகச் சாப்பிடும்போது சாப்பிடுவது வேறு. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சுவைக்காகச் சாப்பிடுங்கள். சாப்பிடும்போது வேறு எந்த வேலையயும் செய்யாமல், வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், உணவை ரசித்துச் சுவைத்துச் சாப்பிடுங்கள். உங்களுக்கான உணவுத் தேவையை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் எனச் சொன்னால், நிச்சயம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிடலாமே என்றுதான் மனம் ஏங்கும். எனவே, உணவின் அளவும் சரி, ஆரோக்கியமும் சரி உங்கள் கையில்தான். வாழ்த்துகள்.

பகுதி நேர வேலை செய்ய
அழைக்கவும்
+919994968884

இன்றைய சிறுகதை.....

புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான். அவனுக்கு வயது இருபத்தெட்டு இருக்கும். அவனது கண்கள் கலங்கியிருந்தன. உடல் சோர்ந்து முகம் மிகவும் துயருற்றிருந்தது.
வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த அக்கணமே கதறி அழுதான். அவன் அழுது முடிக்கும் வரை பொறுத்திருந்த புத்தர் கனிவாகக் கேட்டார்:
,
“”சகோதரா, ஏன் இப்படிக் கண்ணீர் சிந்துகிறாய்? உனக்கு ஏற்பட்ட பிரச்னையை என்னிடம் சொல். என்னிடம் பகிர்ந்துகொள்வது உன் மனதுக்குச் சற்று ஆறுதலாக இருக்கும்.”
,
இளைஞன் தயங்கித் தயங்கிச் சொன்னான்:
“”பகவானே, என் வாழ்க்கையில் நான் எல்லையற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறேன். எடுத்த எதிலும் தோல்வி. தாங்க முடியாத துயரம். ஆதரவுக்கென்று எனக்கு யாருமில்லை. என் மனது மிகவும் பலவீனமாகப்போய்விட்டது. நான் எப்படி இந்த உலகத்தில் வாழ்வது. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். நான் உங்களைப் பார்த்து முறையிடத்தான் பல மைல் தூரம் நடந்து வருகிறேன்.”
,
புத்தர் அன்புடன் புன்னகைத்தார். அவன் தலையை வருடிக் கூர்ந்து பார்த்தார். பிறகு அவன் கையில் தண்ணீர்க் குவளையைக் கொடுத்தார். பிறகு உப்பையும் கொடுத்து விட்டுச் சொன்னார்: “”சகோதரா, இந்தச் குவளையில் உப்பிட்டுக் கலக்கி அருந்து.”
,
அவன் உப்பைக் குவளையில் இட்டுக் கலக்கி அருந்திப் பார்த்தான். இரண்டு மிடறு குடிப்பதற்குள் அவன் முகம் கோணியது. மேற்கொண்டு குடிக்க முடியாமல் அப்படியே கீழே வைத்துவிட்டுச்சொன்னான்:
“”என்னால் இந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை பகவானே. மிகவும் கரிக்கிறது.”
,
“”சரி. முடியவில்லை என்றால் நீ குடிக்க வேண்டாம். விட்டுவிடு” என்ற புத்தர் மீண்டும் இதோ இப்போதும் அதே அளவு உப்பைத் தருகிறேன். இதை நீ எதிரில் இருக்கும் அதோ அந்தக் குளத்தில் கரைத்துவிடு!”
,
புத்தர் சொன்னபடியே அவன் அந்த உப்பை எதிரிலிருந்த குளத்தில் கரைத்தான். கரையில் நின்று பார்த்த புத்தர் சொன்னார்:
“”இப்போது அந்தக் குளத்து நீரைக் குடித்துப் பார்.”
,
உப்புக் கரைக்கப்பட்டபோதும் குளத்து நீரில் உப்பின் சுவை கொஞ்சம்கூடத் தெரியவில்லை. அந்த இளைஞன் போதுமான அளவு நீர் குடித்துவிட்டுக் கரைக்கு வந்தான். “”எதற்காக உப்பைக் கரைத்துக் குடிக்கச் சொன்னீர்கள் என்று
இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. புத்தரைக் குழப்பத்துடன் பார்த்தான். தொடர்ந்து சொன்னார் புத்தர்:

“”நீ சிறிய குவளையில் இருந்த நீரிலும், பிறகு இந்தக் குளத்து நீரிலும் கரைத்தது ஒரே அளவான உப்புதான். ஆனால் சிறிய குவளையில் தண்ணீர் கொஞ்சம்தான் இருந்தது. அதனால்தான் கரிப்புச் சுவை அதிகமாக இருந்தது. எனவே உன்னால் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. ஆனால் இதே உப்பு குளத்து நீரில் கரைக்கப்பட்டிருந்தாலும், அந்த நீரில் உப்பின் சுவை கொஞ்சம்கூடத் தெரியவில்லை அல்லவா. ஏனென்றால் சிறு குவளையில் இருந்த நீரைவிட எண்ணற்ற மடங்கு அதிகமான நீர் குளத்தில் இருக்கிறது.”
நம் துன்ப துயரங்கள் என்பவை உப்பைப்போலத்தான். இவை வாழ்க்கை நெடுகிலும் வந்துகொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்கவே முடியாது. ஆனால் நம்மால் நம் மனதை விசாலமாக்க முடியும். இப்போது உன் மனது அந்தச் சிறியகுவளையைப் போல் தான் இருக்கிறது. அதனால்தான் வாழ்க்கைச் சிரமங்கள் உனக்கு இந்தளவு துயரமளிக்கின்றன. நீ நிறைய அறிவும் அனுபவங்களும் பெற்று உன் மனதைப் பெரிதாக்கு. அதை வலுப்படுத்து. அப்போது உன் துயரங்கள் குளத்தில் கரைக்கப்பட்ட உப்பைப்போலக் காணாமல்போய்விடும். அந்தத் தெளிந்த நிலையில்தான் புதிய வழிகள் புலனாகும். அவ்வழிகளில் நீ உயர்வடைவாய்.”
,,,,
புரிந்துகொண்ட இளைஞன் புத்தரின் பாதங்களைத் தொட்டு வணங்கி மகிழ்ச்சியாகத் திரும்பிச் சென்றான்.🙏🏼

  பகுதி நேர வேலை செய்ய
+919994968884

குட்டி கடி கதை

🐭🦁🐘இந்த_கதையை_10_தடவை_படிச்சாலும்_திரும்ப_திரும்பவும்_சிரிப்பேன்!!
அவ்ளோ காமெடி!!
காட்டில் ஒரு புலி 🐅சிகரெட்🚭 பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி🐀 சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு🏞 எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." அதை கேட்ட புலி🐅 சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது... சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை🐘 உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி🐀 யானையிடம்🐘 கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை🐘 ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது.... அவ்வாறு மூன்று 🐀🐅🐘 பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க🦁 மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது... இதை கண்ட எலி🐀 சிங்கத்திடம்🦁 கேட்டது... "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன்🐀 நான் காட்டுகிறேன்..." இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு 👂சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும்🐅 யானையும்🐘 சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே🦁, தாங்கள் ஏன் இந்த சமாதான🐀 தூதுவனை அடித்தீர்கள்...?" அப்பொழுது சிங்கம் சொல்லிச்சாம் ... "இந்த பரதேசி 🐀🐭😇கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு🏞 பூராவும் நடக்க😭 வெச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."🐀😆🙏

பகுதி நேர வேலை செய்ய
+919994968884

Classic story

💥ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள்.

⚡அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.
கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார்.

💥"அர்ஜுனா,அது புறா தானே.?" என்று கேட்டார் கிருஷ்ணர்.
" ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!" என்றான் அர்ஜுனன்.

💥சில விநாடிகளுக்குப் பிறகு,
"பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது.!" என்றார் கிருஷ்ணர்.

⚡அடுத்த விநாடியே,"ஆமாம்.....ஆமாம் ...அது பருந்து தான்.!"
என்று சொன்னான் அர்ஜுனன்.

💥மேலும் சில விநாடிகள் கழித்து
"அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.!"
கிருஷ்ணர் சொல்ல,

⚡கொஞ்சமும் தாமதிக்காமல் ," தாங்கள் சொல்வது சரிதான்...அது கிளி தான் .!" என பதிலளித்தான் அர்ஜுனன்.

💥இன்னும் கொஞ்சம் நேரமானதும்,
"அர்ஜுனா,முதலில் சொன்னது எல்லாம் தவறு.இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.

அது ஒரு காகம்.!" கள்ளச் சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர்.

⚡"நிஜம் தான் கிருஷ்ணா...அது
காகமே தான்...சந்தேகமே இல்லை.!"
பதிலளித்தான் அர்ஜுனன்.

💥" என்ன நீ ,நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே.! உனக்கென்று எதுவும் யோசிக்கத்
தெரியாதா.?"
கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.

⚡"கிருஷ்ணா, என் கண்ணை விடவும்,அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.நீ ஒன்றைச்
சொன்னால் ,அது பருந்தோ,காகமோ,
புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.

      அதனால் நீ என்ன சொல்கிறாயோ,அப்படித் தானே அது இருக்க முடியும்.
       தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும்.?" அமைதியாகச் சொன்னான் ,அர்ஜுனன்.

🌹இந்த நம்பிக்கை தான் பகவானை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.

           🌺👌🌺

Moral . . .

🌺கடவுள் மேல் சந்தேகம் இல்லாமல் ,நம்பிக்கை வையுங்கள்.
         அவர் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்ற முடியும் என்பதை உணருங்கள்.
       உங்கள் சங்கடங்களைப் போக்கவும்,சந்தோஷத்தை நிலைக்க வைக்கவும்
கடவுளால் மட்டுமே முடியும் என்பதை உணருங்கள்
        💥💥💥💥

👌இந்தத் தத்துவத்தை நீங்களும், நானும் புரிந்து நடந்து கொண்டோமென்றால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் நமக்கு இனிய நாள்தான்!💝🔔
            🌹🌹🌺🌺🌹

பகுதி நேர வேலை செய்ய
+91 9994968884

Business plan

Every Friday business plan explain
Please call me viewers
It's not given cuge income in this business.
Big offer for you.
I  am waiting...!!!!

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்.


(கற்பனை வரிகளாக இருக்கலாம்)

நான் வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்திருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானது.

எப்படியிருந்தாலும் என் பணிச்சுமைகள்  எல்லாம் தாண்டி நானும் வாழ்க்கையில் சிறிது சந்தோசங்களை அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதியில் தான் அறிந்து கொண்டேன்.

இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து கொண்டு என் முழு வாழ்க்கையையும் திரும்பி பார்க்கும் இந்த தருணத்தில் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ் எல்லாம் செல்லா காசாக , அர்தமற்றதாக மரணத்தின் முன் தோற்று போய் நிற்பதை உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது. கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில் உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு போதுமான பணம் சம்பாரித்த பின், பணத்திற்கு சம்மந்தமில்லாத விஷயங்களையும் சம்பாரிக்க தொடங்க வேண்டும் என்பது இப்போது புரிகிறது. அது உறவாகவோ, இல்லை எதாவது கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.

அதைவிட்டு பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது என் வாழ்க்கையை போல.

கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனதில் இருக்கும் அன்பை உணரசெய்யும் சக்தியை கொடுத்திருக்கிறார், பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும் பிரமைகள் தான்.

நான் சம்பாரித்த பணம் எதையும் இங்கு கொண்டுவர முடியாது. நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கிறது.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும். வாழ்க்கைக்கு எந்த எல்லைகளுமில்லை. எங்கு செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள். தொட நினைக்கும் உயரத்தை தொட முயற்சியுங்கள். நீங்கள் வெற்றியடைவது உங்கள் எண்ணத்திலும் கைகளிலும் தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் அந்த பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரும் வாங்கிகொள்ளுமாறு செய்ய முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால் மீண்டும் வாங்கிவிடலாம். ஆனால் நீங்கள் தொலைத்து அதை பணத்தால் வாங்க முடியாது என்ற ஒன்று உண்டென்றால் அது உங்கள் வாழ்க்கை தான்.

வாழ்க்கையில் எந்த கட்டத்தில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை , இப்போது வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள். நாம் நடித்து கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு, அன்பை வாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள்.

மரணப்படுக்கையில் ஸ்டீவ்..

பகுதி நேர வேலை செய்ய
+91 9994968884.