புதன், 2 நவம்பர், 2016

குட்டி கடி கதை

🐭🦁🐘இந்த_கதையை_10_தடவை_படிச்சாலும்_திரும்ப_திரும்பவும்_சிரிப்பேன்!!
அவ்ளோ காமெடி!!
காட்டில் ஒரு புலி 🐅சிகரெட்🚭 பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி🐀 சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு🏞 எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." அதை கேட்ட புலி🐅 சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது... சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை🐘 உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி🐀 யானையிடம்🐘 கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை🐘 ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது.... அவ்வாறு மூன்று 🐀🐅🐘 பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க🦁 மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது... இதை கண்ட எலி🐀 சிங்கத்திடம்🦁 கேட்டது... "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன்🐀 நான் காட்டுகிறேன்..." இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு 👂சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும்🐅 யானையும்🐘 சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே🦁, தாங்கள் ஏன் இந்த சமாதான🐀 தூதுவனை அடித்தீர்கள்...?" அப்பொழுது சிங்கம் சொல்லிச்சாம் ... "இந்த பரதேசி 🐀🐭😇கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு🏞 பூராவும் நடக்க😭 வெச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."🐀😆🙏

பகுதி நேர வேலை செய்ய
+919994968884

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக