வியாழன், 27 செப்டம்பர், 2018

நாடார் இனம் வரலாறு

நாடார் இனம் வரலாறு எப்படி ஒடுக்கப்பட்டது,
பனைஏறுவது மட்டும் நம் குலதொழில் என நினைத்துகொண்டிருக்கும் நம் நாடார் இளைஞர்களுக்கு நாடாண்ட வரலாறு தெரியாமல் போனது எப்படி?
இதெற்கெல்லாம் யார் காரணம்?

இதற்கெல்லாம் பதிலறிய நாம்
நாம் 200 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.1814ல் இங்கிலாந்தின் வட அயர்லாந்து பகுதியில், ஒரு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் (ஒருமை என்று கருத வேண்டாம். இந்த மரியாதையே அதிகம்.) தான் கால்டுவெல். லண்டன் மிஷன் சொசைட்டி என்ற மதமாற்றும் கிறிஸ்தவ அமைப்பின் உதவியோடு தனது பட்டப்படிப்பை இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முடித்தான்.
1838ல் கால்டுவெல்லை சர்சு அதிகாரியாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
Society of Propagation of the Gospel கால்டுவெல்லை, மதமாற்றம் செய்யும் பொருட்டும், திருநெல்வெலியில் உள்ள இளையான்குடி பகுதிக்கு அனுப்பி வைத்தது. திருநெல்வெலியும் சரி, அதன் அருகில் தென் கோடியில் அமைந்துள்ள குமரியும் சரி - இவ்விரண்டு மாவட்டங்களும் நாடார் சாதி மக்களை அதிகமாக கொண்ட பகுதிகள். ஆதலால், கால்டுவெல்லின் மதமாற்றும் கண்கள் நாடார்கள் மீது விழுந்தது.
கிறித்துவ மதம் நாடார்களை பிரித்தது என்பதற்கு சாட்சி இதோ!

நாடார்களை எப்படி மதம் மாற்றுவது?
நாடார்கள் தங்களை தாங்களே இழிவாக கருத வேண்டும். அந்த இழி நிலைக்கு இந்து சமயமே காரணம் என்று திரிக்க வேண்டும். இதன் மூலம், இந்து சமயத்தின் மீது ஒரு வெறுப்புணர்வை நாடார்கள் மத்தியில் ஏற்படுத்தி, அவர்களை எளிதாக மதமாற்றிவிடலாம். ஆனால், இவை நடக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? அதற்கு, முதலில் நாடார்களின் பூர்வீக வரலாறு குறித்த பெருமிதத்தை அழிக்க வேண்டும். அதை தான் கால்டுவெல்லும் செய்தான்!

இதன் முதற்கட்டமாக, 1849ல் "திருநெல்வேலி சாணார்கள்" என்ற 77 பக்க ஆங்கில புத்தகத்தை கால்டுவெல் எழுதினான். இப்புத்தகம் முதலில் கிழக்கிந்திய கம்பனியின் ஆதரவுடனும், பின்னர் 1850ஆம் ஆண்டு Society for the Propagation of Christian Knowledge என்ற அமைப்பின் மூலம் லண்டனில் வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தில் கால்டுவெல், நாடார்களை தரைகுறைவாக காட்டுமிராண்டிகளாக சித்தரித்து இருந்தான். "நாடார்களின் பூர்விகம் தமிழகம் அல்ல என்றும், அவர்கள் இலங்கையில் இருந்து பனையெறிப் பிழைக்க வந்த வந்தேறிகள்" என்றும் குறிப்பிட்டுள்ளான். மேலும், நாடார்கள் கடவுளுக்கு பயப்படுகின்றவர்கள் அல்ல(ஏசுவை நினைத்து எழுதப்பட்வையாக இருக்கலாம்!) என்றும், நாடார்கள் மந்த புத்திகாரர்கள், அடிமைகள், மூர்க்கர்கள், எழுத்தறிவு அற்றவர்கள், மிகவும் தரைகுறைவான பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்றும், கால்டுவெல் தன் புத்தகத்தில் குறிப்பிட்டான்.

கால்டுவெல்லின் இந்த பொய் பிரச்சாரம் பல வகைகளில் எதிரொலித்தன. எதிரொலிக்கின்றன. இன்று, CBSE பாட புத்தகத்தில் நாடார்களை இழிவு படுத்தியதாக கூறி நாடார் சாதி அமைப்புகள் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றது. ஆனால், அவர்கள் உண்மையில் எதிர்த்து போராட வேண்டியது, கால்டுவெல்லையும், மிஷனரிகளையும் தான். ஏன் என்றால், இவர்கள் பரப்பிய கட்டுக்கதைகளைத் தான் வரலாற்று அவனங்களாக கருத்தில் கொண்டு, CBSE புத்தகத்தில் நாடார்கள் குறித்தான இழிவான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மஷ"நரி"களின் நாடார்கள் பற்றிய பொய் பிரச்சாரம் பிற இந்து சாதியினர் மத்தியிலும் பல வினைகளை உருவாக்கியது.

1921ல் தான் "நாடார்" என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அரசு மூலம் செயல்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன் நாடார்கள் சாணார்கள் என்றே அழைக்கப்பட்டனர். சாணார் என்ற சொல், சான்(றோ)றார் என்ற சொல்லின் திரிந்த பேச்சு வழக்காகும். சான்றோர் என்பதின் பொருள், அறப்போர் மரபிலும், ஆட்சிக் கலையிலும் தேர்ந்த தலைமக்கள் என்பதாகும். நாடார் என்பதின் அர்த்தம் கூட, நாட்டை ஆள்பவர்கள் என்பது தான். கால்டுவெல் கூறுவதை போல, நாடார்கள் மூர்கர்களாகவோ, அடிமைகளாகவோ இருந்திருந்தால், அவர்கள் "சான்றோர் குலத்தவர்" என்று அழைக்கப்பட்டிருப்பரா?

மிஷனரிமார்கள் தங்கள் மதமாற்ற சுயநலத்திற்காக "சாணார்" என்ற சொல்லை இழிவானதாக பிரச்சாரம் செய்ததன் எதிரொலி, சாணார்கள் அப்பெயரை வெறுத்து, தாங்கள் இனி "நாடார்கள்" என்றே அழைக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அது அரசால் 1921ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

உண்மையிலேயே நாடார்கள் சேர, சோழ, பாண்டிய நாட்டின் அரச குலத்தை சார்ந்தவர்கள். அரச குலம் என்றால், போர்த் தொழிலையும், குடிகாவலையும் தன் பரம்பரை உரிமையாக கொண்ட குலம் என்று பொருள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் பேஷ்கராக இருந்த நாகம் அய்யா கூட, தனது Travancore State Manual என்ற நூலில், "சான்றோர் சாதியினர், முற்காலத்தில் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள்" என்றே குறிப்பிட்டுள்ளார்.

நாடார்கள்(சாணார்கள்) ஷத்திரிய வம்சாவளி என்பது தான் உண்மை.

2 கருத்துகள்:

  1. வில்லவர் மற்றும் பாணர்

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.

    இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.

    பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
    அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.

    பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.


    வில்லவர் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்ஸிநவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்


    பாணா மற்றும் மீனா

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.

    மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  2. வில்லவர் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.


    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    பதிலளிநீக்கு