திங்கள், 12 மார்ச், 2018

நானும் அரசியலுக்கு வந்துவிட்டேன் : சகாயம் ஐஏஎஸ்

நானும் அரசியலுக்கு வந்துவிட்டேன் : சகாயம் ஐஏஎஸ்
Punnagai 11 Mar. 2018 15:28

ஊழலை எதிர்த்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தமிழகத்தில் பல்வேறுதுறை பிரபலங்கள் அரசியல் பேசுவதும், களம் இறங்குவதும் புதிய ட்ரெண்டிங்க் ஆகிவிட்டது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சகாயம் ஐஏஎஸ், ஊழலை எதிர்த்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் அரசியலுக்கு வந்துள்ளதை சமூகம் உறுதி செய்யும் என்றார்.
தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது, “கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையின் போது ஓர் இரவு சுடுகாட்டிலேயே தங்கினீர்களே, அப்போது பயமாக இல்லையா?” என்று கேட்கப்பட்டது.
இக்கேள்விக்கு பதில் கூறிய அவர், “எனக்கு சுடுகாட்டில் படுக்க பயமில்லை ஆனால் இந்த சதந்திர நாட்டில் இருப்பதற்குத்தான் பயமாக இருக்கிறது” என்றார்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழு விசாரணை நடத்தியது. அப்போது, கிரானைட் குவாரி அருகே உள்ள சுடுகாட்டில் நரபலி கொடுக்கப்படுவதாக புகார் வந்தது. இதன் பேரில் அந்த சுடுகாட்டில் சடலத்தை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய முயன்றபோது, போலீசார் ஒத்துழைக்கவில்லை. ஆனால், அசராத சகாயம் எவ்வளவு நேரம் ஆனால் பரவியில்லை என்று சுடுகாட்டிலேயே தங்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக