அடிமையாக வாழும் உனக்கு
என்ன சுதந்திரம் கிடைத்துவிட்டது ?
என்ன உரிமை உள்ளது உனக்கு ?
கடலில் உண்டா ?
காவிரியில் உண்டா ?
பாலாற்றில் உண்டா ?
முல்லை பெரியாரில் உண்டா?
மலையில் உண்டா ?
நெய்வேலியில் உண்டா?
தஞ்சையின் நஞ்சையில் உண்டா ?
உனது காளை மாடுகளோடு
விளையாடும் உரிமை உண்டா?
பேருந்தில் ஏறி ஆந்திராவுக்கு செல்லும் உரிமை உண்டா ?
இல்லை உன் மொழியை
சொல்ல உரிமை உண்டா?
எதுவும் இல்லாத ஒரு அடிமைக்கு எப்படி இது
சுதந்திரமாக இருக்க முடியும் ?
இந்தியத்திலிருந்து என்று விடுதலை பெறுகிறோமோ
அதுவே தமிழனுக்கான சுதந்திர தினம்..
தமிழர் தேசியம் ..நோக்கி முன்னேறுவோம் !!
#தமிழ்வெல்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக