செவ்வாய், 18 அக்டோபர், 2016

ஈரோட்டின் கிராமத்து விவசாயிடமிருந்து நேரடியாக வீட்டிற்கு மட்டும்......

முதல்தர சுத்தமான பாரம்பரிய முறையில் வாகை மரச்செக்கினால் தயாரிக்கப்பட்ட இயற்கை நல்லெண்ணெய்,கடலெண்ணெய்,
தேங்காய் எண்ணெய் மற்றும் இயற்கை வழி நாட்டுச்சர்க்கரை மற்றும் குளியல் பவுடர் தயாரிப்பாளர்.

எமது உள்ளது உள்ளபடியே மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு விபரம்,

இயற்கை நல்லெண்ணெய்:

கால்சியம் நிறைந்த மண்ணில்(காங்கேயம் காளைகள் வளரும் பகுதி)விளைந்த தரமான செங்கூர் எள்ளை கல்,மண் நீக்கி சுத்தம் செய்தபிறகு தண்ணீரில் ஊறவைத்து அலசி நீரில் மிதக்கும் பாளை கழிவுகளை அகற்றி(இந்த கழிவுகளை அகற்றினால் மட்டுமே கச்சல்,காரல் வராது)இயற்கையாக வெய்யிலில் காயவைத்து இவற்றுடன் 1கிலோ எள்ளுக்கு 100கிராம் வீதம் பனங்கருப்பட்டி சேர்த்து பாரம்பரிய  குளிர்வித்தல் முறையில் வாகை மரச்செக்கில் ஆட்டிய பிறகு வரும் நல்லெண்ணெயை வெய்யிலில் காயவைத்து நீர்த்தன்மையை உலர்த்தி குறைந்தபட்சம் எட்டு நாட்களுக்கு பாத்திரத்தில் வைத்து தானாக வடிகட்டி தெளிந்தபின்னர் விற்பனைக்குத் தருகிறேன்.

இயற்கை கடலெண்ணெய்:

மானாவாரி நிலத்தில் விளைந்த  நிலக்கடலை பருப்பை சுத்தம் செய்து பிஞ்சு,பூஞ்சான்,முளைப்பு வந்த பருப்பு ஆகியவற்றை நீக்கி (இவைகளையெல்லாம் நீக்காவிட்டால் உடலுக்கு மிக கொடிய  வியாதியை உருவாக்கும் aflatoxin போன்ற தீய நச்சுக்கள் எண்ணெயில் சேர்ந்தே இருக்கும்) வெய்யிலில் காயவைத்து மரச்செக்கில் ஆட்டி வடிகட்டி தெளிந்தபிறகு விற்பனைக்கு தருகிறேன்.

ஆர்கானிக் தேங்காய் எண்ணெய்:

இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தி வளரும் தென்னைமரத்திலேயே காய்ந்து விழுந்த தேங்காயை கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்வரை தோட்டத்திலேயே காய்ந்து கசங்கள் நிலைக்கு வந்த பிறகு உடைத்து எந்தவிதமான கெமிக்கல் புகையும் இல்லாமல் தானாக வெய்யிலில் இயற்க்கையாக காய்ந்த பிறகு (இப்படி இயற்கையாக காயவைத்தால் மட்டுமே தலைமுடி நரை வராது,உதிராது,கண் குளிர்ச்சி,உணவுக்கு பயன்படுத்தலாம்) தேங்காய் பருப்புடன் ஏலக்காய்,எலுமிச்சம்பழம் மற்றும் கரும்புவெல்லம் சேர்த்து மரச்செக்கில் ஆட்டி வெய்யிலில் காயவைத்து வடிகட்டி தெளிந்த பிறகே ஆர்கானிக் தேங்காய் எண்ணெய்  விற்பனைக்கு தருகிறேன்.

ஆர்கானிக் நாட்டுச்சர்க்கரை:

ஆர்கானிக் சான்றிதழ் பெற்ற தோட்டத்திலிருந்து இயற்கை உரம் மற்றும் பஞ்சகாவியம் மட்டுமே உபயோகித்து வளர்ந்த கரும்புடன்  சோற்றுக்கற்றாழை,ஓடக்கல் சுண்ணாம்பு கரைசல் மற்றும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து பாரம்பரிய இயற்கை வழியில் Stainless Steel கொப்பரைமூலம் தயார் செய்து உலர்த்திய பிறகு சல்லடையில் சலித்து நல்லசர்க்கரையாக விற்பனை செய்கிறேன்.

ஆர்கானிக் இயற்கை குளியல் பவுடர்கள்:

நமது தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மனதின்முன் நிறுத்தி
மூத்தோர்களின் ஆலோசனையின்பேரிலும்,
மூலிகை ஆராய்ச்சியாளர்களின் வழிகாட்டுதலின்படியும் பாரம்பரிய முறையில் இயற்கையான சீயக்காய்தூள் மற்றும் அரப்புத்தூள் தயாரிக்கிறேன்.அவைகளின் விபரம்......

மூலிகை சீயக்காய் பொடியின் கலவை:

சீயக்காய்,
பூந்திக்கொட்டை,
வெட்டிவேர்,
நெல்லிக்காய்,
கரிசலாங்கண்ணி,
கற்றாழை,
மருதாணி,
செம்பருத்தி,
வெந்தயம்,
பாசிப்பயறு,
இவற்றுடன் கூந்தல் வளர்ச்சி மற்றும் சருமத்திலுள்ள வியர்வைத்துளைகளை சுத்தம் செய்ய உதவும் இயற்கை இடுபொருட்களையும் சேர்த்து பாரம்பரிய முறையில் தயாரிக்கிறேன்

இயற்கை அரப்புத்தூள்:

நூறாண்டுகளுக்கும் மேலாக வளர்ந்த ஊஞ்சமரத்தின் தழையிலிருந்து வேறு எதையும் கலக்காமல் சுத்தமான இயற்கை  அரப்புத்தூள் பாரம்பரிய முறையில் தயார்செய்கிறேன்.

சீயக்காயும்,அரப்பும் தலை மற்றும் உடலுக்கும் பயன்படுத்தலாம்.இது சோப்பு மற்றும் ஷாம்பிற்கு இயற்கையின் மாற்றே.

ஆர்கானிக் கஸ்தூரி மஞ்சள்:

ஆர்கானிக்தர முத்திரையோடு இயற்கை முறையில் விளைந்த ஈரோட்டு விரலி மஞ்சளை சுத்தம்செய்து காயவைத்து அரைத்து ஆர்கானிக் கஸ்தூரி மஞ்சளாக அனுப்புகிறேன். கொங்கு மண்ணின் குணமும்,மணமும் இந்த பரிசுத்த மஞ்சளின்மூலம் அறியலாம்.

வரும் தலைமுறையை நச்சுண்ணா ஆரோக்கியமான தலைமுறையாக உருவாக்குவோம்.

இயற்கையின் உயிரோட்டமும்,
தாவரத்தின் பச்சயமும்,
உழைப்பின் உண்மையும்,
ஆரோக்கியம்,அழகின் மேன்மையும்,
உள்ளது உள்ளபடியே மரச்செக்கு எண்ணெய்
நல்லது மட்டும் உங்கள் இல்லம் தேடி.....

இந்தியாவின் அனைத்து மாநிலங்களின், அனைத்து பகுதிகளுக்கும் எந்த ஒரு இடைத்தரகரும்,கலப்படமும் இல்லாமல் நேரடியாக வீட்டிற்கே கொரியர் மற்றும் பதிவு தபால்மூலம் அனுப்பி வைக்கிறேன்.

நல்லெண்ணெய் 1லிட்டர் ரூ.290,
கடலைஎண்ணெய் 1லிட்டர் ரூ.240, தேங்காய்எண்ணெய் 1லிட்டர் ரூ.220,
நாட்டுச்சர்க்கரை 1கிலோ ரூ.90,
சீயக்காய் பவுடர் 250கிராம் ரூ.120,
அரப்புத்தூள் 500 கிராம் ரூ.100,
கஸ்தூரி மஞ்சள் 250 கிராம் ரூ.120.
மூலப்பொருட்களின் விலையை பொறுத்து உற்பத்தி விலை ஏறும்,இறங்கும்.

கொரியர்சார்ஜ் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு லிட்டருக்கும் ரூ.40 கூடுதல்.
மற்ற மாநிங்களுக்கு ஒவ்வொரு லிட்டருக்கும் ரூ.50 கூடுதல்.

12 லிட்டர் பெட்டிக்கு தமிழ்நாட்டிற்க்குள் மட்டும் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பினால் ரூ.100 மட்டுமே கூடுதல்.

உள்ளது உள்ளபடியே மரச்செக்கு எண்ணெய் மற்றும் நாட்டுச்சர்க்கரையின் உபயோக காலவரம்பு,
300 நாட்கள்வரை,
அரப்பு,சீயக்காய்தூள்,கஸ்தூரி மஞ்சள்தூள் 600 நாட்கள்வரை.

ஒரு லிட்டர் முதல் அனுப்புகிறேன்
தேவைக்கு அழையுங்கள்,

சீனு,
ஸ்ரீ வாகை ஆர்கானிக்ஸ்,
(Organic certified farms)
கொங்குடையாம்பாளையம் கிராமம்,
ஈரோடு.
அலைபேசி:99 76 340000.

www.Facebook.com/traditionaloils ,

www.traditionaloils.com ,

YouTube:traditionaloils erode

இது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சேவையில் வணிகநோக்கமில்லாமல் செயல்படும் இயற்கை மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பகம்.

படித்து பிடித்தால் நண்பர்களுக்கும் பகிருங்கள்.நன்றீங்க......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக