செவ்வாய், 18 அக்டோபர், 2016

*கோபத்தின் கதை!*


____________________
ஒரு இளைஞனுக்கு 👦🏻 அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது.
ஒரு நாள் அவன் அப்பா 👨🏼 அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும்🔩 கொடுத்தார்.
”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம்
வீட்டின் பின் சுவரில் ஆணி 🔩
அடிக்குமாறு கூறினார்”.
முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது .
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது 🤗 என அவன்👦🏻 அப்பாவிடம் 👨🏼 கூறினான்.
இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.
45 நாளில் அடித்த ஆணிகள் 🛠 பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் 😇 அப்பாவை 👨🏼 அழைத்து காட்டினான் 👈🏽 .
உடனே அப்பா சொன்னார் ஆணிகளை🔩 பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்? 🤕
உன் கோபம் இது போல பலரை ‍‍‍👦 காயப்படுத்தி இருக்கும் அல்லவா?
படித்ததில் பிடித்தது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக