செவ்வாய், 18 அக்டோபர், 2016

பசுவுக்கு பழம் கொடுங்கள்



அட்சய திரிதியை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசு மாட்டில் தான் அனைத்து தேவர்களும் இருப்பதாக ஐதீகம். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு தானதர்மம்.

அன்னதானம் செய்வது மூலமும் பெருமாளின் கருணையால் குடும்பத்தில் உள்ள வறுமை, கஷ்டம் விலகும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்பர் அன்னையின் கையிலிருக்கும் பாத்திரம் `அட்சய பாத்திரம்' இறைவனுக்கு படியளந்த இந்த நாள் `அட்சய திரிதியை' ஆகும்.

இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும். மற்ற நாட்களில் இறைவனுக்கு நிவேதனம் என்ற பெயரில் உணவை காண்பிக்கிறோம். ஆனால் இந்நாளில் இறைவா!

உண்டு மகிழ்வாயாக என வேண்டினால் இறைவனே உணவை ஏற்று நம்மை ஆசிர்வதிப்பார் என்பது ஐதீகம். எனவே மற்ற நாட்களில் படைப்பதைவிட `அட்சய திரிதியை' நாளில் இறைவனுக்கு படைத்து உண்ணும் பிரசாதம் மிகச் சிறந்ததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக